உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் வீடு தேடி மருத்துவ முகாம்
உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
உடன்குடி:
தமிழக அரசின் வீடு தேடி மருத்துவ முகாம் திட்டத்தின்படி ரத்த அழுத்தம், நீரழிவு நோய், பரிசோதனை முகாம் உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டில் நடந்தது.
மக்களை சந்தித்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. 3-வது வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் முகாமை தொடங்கி வைத்தார்.
பின்பு 3-வது வார்டு முழுவதும் சுற்றி வந்து 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களை கட்டாயமாக பரிசோதனை செய்ய அழைத்து வந்து பரிசோதனை செய்ய வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை 3-வது வார்டு தி.மு.க. செயலாளர் சலீம் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் ஹாஜா முகைதீன், பீர் முஹம்மது மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.