உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி அருகே மினிவேனில் குட்கா கடத்திய டிரைவர் கைது

Published On 2022-05-28 09:21 GMT   |   Update On 2022-05-28 09:21 GMT
கிருஷ்ணகிரி அருகே மினிவேனில் குட்கா கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டமாத்திகிரி போலீசாருக்கு ஓசூர் செக்போஸ்ட் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து அத்திப்பள்ளி-அந்திவாடி சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்று போலீசாரை பார்த்தவுடன் நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்து 2 பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். 

போலீசார் விரைந்து சென்று வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் விஜய் (வயது 23) என்பவரை மடக்கி பிடித்தனர். அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரூ.2.87 லட்சம் மதிப்பிலான 432 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. 
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விஜயை கைது செய்தனர். தப்பி ஓடிய விஜயகுமார் (வயது 45) ,பாஸ்கர் (வயது 20) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News