உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் ரூ. 7 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலை
கிருஷ்ணகிரியில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் ரூ. 7 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஒரு சரக்கு வாகனம் சென்டர் மெடியனில் மோதி நின்றிருந்தது.
வண்டியில் யாரும் இல்லை. அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தையும், போதைப்பொருட்களை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர்.
போதை பொருள்களின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.இந்த வாகனத்தை ஒட்டி வந்தது யார் ? எங்கிருந்து இந்த போதை பொருட்கள் விவரப்பட்டது ? எங்கு கொண்டு செல்லப்பட்டது ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.