உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே குடிபோதையில் கிணற்றில் மூழ்கி பூ வியாபாரி சாவு
தேன்கனிக்கோட்டை அருகே குடிபோதையில் கிணற்றில் மூழ்கி பூ வியாபாரி பலியானார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தேர்பேட்டை சாலை தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பைய்யா மகன் ரவி (வயது 38). பூ வியாபாரம் செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று தன் நண்பர்களுடன் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அர்த்த கூர் கிராமத்திலுள்ள வெங்கடசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
நண்பர்களுடன் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த ரவி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக நண்பர்கள் ரவி வீட்டிற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் தேன்கனிக்கோட்டை எஸ்.ஐ .கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்துரவியின் தங்கை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேன்கனி கோட்டைபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.