உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிவகிரியில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-05-27 09:20 GMT   |   Update On 2022-05-27 09:23 GMT
சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி சக்தி கிழமேல் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் அந்த பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் முருகனை கைது செய்து அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விஸ்வநாதபேரி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மது விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News