உள்ளூர் செய்திகள்
பெருந்துறை அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை சிலேட்டர் நகர் வசந்தம் பார்க் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 27). இவர் மதுபானத்தை அனுமதியின்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது வீரமணி 18 பிராந்தி பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.