உள்ளூர் செய்திகள்
ஆரணியில் 2 கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் குட்கா போதை வஸ்துகள் விற்பனை செய்யபடுவதாக புகாரின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரணி டவுன் பழைய பஸ் நிலையத்தில் கடையில் ஆய்வு செய்த போது குட்கா போதை வஸ்துகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்
பின்னர் ஏற்கனவே அபராதம் விதித்ததால் தற்போது கடைக்கு சீல் வைத்து 10ஆயிரம் அபராதமாக விதித்தனர்.
இதனையொடுத்து ஆரணி அருகே களம்பூர் பஜார் வீதியில் உள்ள ஜீஸ் கடையில் குட்கா ஆன்ஸ் போதை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.