உள்ளூர் செய்திகள்
.

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி மேஸ்திரி பலி

Published On 2022-05-26 10:19 GMT   |   Update On 2022-05-26 10:19 GMT
பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி மேஸ்திரி பலியானார்.
கிருஷ்ணகிரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கோவிலூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). கட்டிட மேஸ்திரியான மணிகண்டன் தனது நண்பர்களுடன் பொம்மாசத்திரம் ஏரியில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏரி நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News