உள்ளூர் செய்திகள்
விபத்து

மணலி புதுநகரில் சரக்கு வேன் மோதி 3-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2022-05-25 08:46 GMT   |   Update On 2022-05-25 08:46 GMT
விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவொற்றியூர்:

மணலி புதுநகரை அடுத்த கவுண்டர் பாளையம் திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா. பூம்பூம் மாட்டுக்காரர். இவருடைய மகள் சத்யா(வயது 8). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுமி சத்யா வீட்டின் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேனை டிரைவர் பின்புறமாக இயக்கினார்.

இதில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி சத்யா மீது சரக்குவேன் மோதியது. இதில் அவள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினாள்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் மாணவி சத்யாவை மீட்டு பாடியநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News