உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கருப்பூர் ஊராட்சி மேல்கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் வயது (55) விவசாயி இவரது மனைவி மோகனா வயது (45) தங்களது வீட்டை பூட்டிக் கொண்டு இவர்கள் இருவரும் வெளியூர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அவர்கள் வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன்பக்கம் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிகிடந்தன பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் தங்க நகைகள் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து உமராபாத் போலீசில் நிலையத்தில் மோகனா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.