உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பருத்தி சாகுபடி பணிக்கு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-05-24 07:49 GMT   |   Update On 2022-05-24 07:49 GMT
100 நாள் திட்ட தொழிலாளர்களை பருத்தி சாகுபடி செய்யும் வயல்களுக்கு அனுப்ப வேண்டும்.

குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தொழிலாளர் பற்றாக்குறை, நிலையில்லாத விலை, பி. ஏ. பி., பாசன சுற்று குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

விவசாய தொழிலாளர்கள் பலர் திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்களுக்கு வேலைக்கு சென்று விட்டனர். மீதமிருக்கும் தொழிலாளர்களும் 100நாள் திட்ட வேலைக்கு சென்று விடுகின்றனர்.

பருத்தி மற்றும் நூல் விலை ஏற்றம் காரணமாக இன்று விசைத்தறி மற்றும் பின்னலாடை துறை உள்ளிட்ட தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் 100 நாள் திட்ட தொழிலாளர்களை பருத்தி சாகுபடி செய்யும் வயல்களுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News