உள்ளூர் செய்திகள்
ஓசூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் டவுன் போலீசார் அரசு ஆஸ்பத்திரி அருகில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் 20 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, உள்ளிட்டவை வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவரது பெயர் பழனிசாமி (வயது 30), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா கிடடம்பட்டி அருகே உள்ள முத்தூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.