உள்ளூர் செய்திகள்
வெம்பாக்கம் அருகே சாலையில் நடந்து சென்ற தொழிலாளி பைக் மோதி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா, பொக்க சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 57), விவசாயக் கூலி தொழிலாளி.
இவரது மகள்களை வடமணப்பாக்கம் கிராமத்திலும், பக்கத்து கிராமமான மேல் பூதேரியிலும் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு 8.30 மணி அளவில் ஆற்காடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் பின்னால் வந்த பைக் அவர்மீது மோதியது.
இதில் முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக முருகன் மகன் அருண்குமார் மோரணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.