உள்ளூர் செய்திகள்
file photo

சாராயம் விற்ற பெண்ண் கைது

Published On 2022-05-21 09:46 GMT   |   Update On 2022-05-21 09:46 GMT
சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியனூர் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் காரியானூரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காரியானூரை சேர்ந்த பவுனம்மாள் என்பவர் ஆலமரம் அருகே சாராயயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News