உள்ளூர் செய்திகள்
உயிரிழந்த பெண் குரங்குக்கு பொதுமக்கள் பூஜை செய்து அடக்கம் செய்தனர்.

தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்த பெண் குரங்கு- பூஜை செய்து அடக்கம் செய்தனர்

Published On 2022-05-20 10:06 GMT   |   Update On 2022-05-20 10:06 GMT
கிருஷ்ணகிரி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்த பெண் குரங்குக்கு பூஜை செய்து பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,

 கிருஷ்ணகிரி அடுத்த முல்லை நகர் குடியிருப்பு பகுதியில் கூட்டமாக சுற்றி திரிந்த குரங்குக் கூட்டத்தில் கர்ப்பமான பெண் குரங்கு தெரு நாய்கள் கடித்ததில் இறந்து போனது சம்பவத்தை வனத்துறையிடம் தெரிவித்தபோதும் யாரும் வராததால் பல மணி நேரம் சாலையில் கிடந்தது.

பொதுமக்கள் அழைப்பின்பேரில் அறம் சிகரம் தொண்டு நிறுவன கோபிநாத் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த கர்ப்பமான பெண் குரங்கை மீட்டு முல்லை நகர்  பொதுமக்கள் ஒன்று கூடி இறந்த பெண் குரங்கை ஏரிக்கரை பகுதியில் பூஜை செய்து அடக்கம் செய்தனர்.
Tags:    

Similar News