உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, போக்சோவில் டிரைவர் கைது

Published On 2022-05-20 09:28 GMT   |   Update On 2022-05-20 09:28 GMT
சென்னிமலை அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:

சென்னிமலை அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னிமலை அடுத்த வெள்ளோடு நானிபாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் (44). டிரைவர்.  
இந்நிலையில் நேற்று இரவு 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாக்கியராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் பாக்கியராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பாக்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News