உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி

Published On 2022-05-19 06:36 GMT   |   Update On 2022-05-19 06:36 GMT
எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார்.

 எட்டயபுரம்:

 எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூர் கிழக்கு  தெருவை சேர்ந்தவர்  சித்தவன் (வயது 75). இவர் கருப்பூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்.  நேற்று இவர் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பி ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

வடக்கு முத்தலாபுரம் அருகே வளைவில் சென்ற போது  பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.   இதில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News