உள்ளூர் செய்திகள்
பெரியகுளத்தில் 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பெரியகுளத்தில் 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
பெரியகுளம்:
பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த சின்னபாண்டி, இ.புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேல். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் வீடுகளை உடைத்து திருடுவது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
எனவே தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.