உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஜோலார்பேட்டை அருகே வேனில் கடத்த முயன்ற 2 ½ டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-05-17 10:00 GMT   |   Update On 2022-05-17 10:00 GMT
ஜோலார்பேட்டை அருகே வேனில் கடத்த முயன்ற 2 ½ டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆந்திரா மாநிலத்திற்கு ரேசன் அரிசி வேனில் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அச்சமங்கலம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது வேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 2 ½ டன் ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து போலீசார் வேனை ஓட்டி வந்த ஆதியூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News