உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஜோலார்பேட்டை பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகர மக்களுக்கு 11 கே.வி.மின்சாரம் வழங்கும் வகையில் தரைவழி மின் கேபிள் புதைக்கும் பணிமேற்கொள்ள போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை ஜோலார்பேட்டை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சில இடங்களில் தரைவழி மின் கேபிள் புதைக்கும் பணிமேற்கொள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் தடை ஏற்படுகிறது. இதனால் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இைதயொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்தார். உடனடியாக பணிகளை மேற்கொள்ள மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.