உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவுவது போல் நடித்து செல்போன் பறிப்பு

Published On 2022-05-15 10:54 GMT   |   Update On 2022-05-15 10:54 GMT
போலீசார் திருமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ காலனியை சேர்ந்தவர் சுதாகரன். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தண்ணீர் பந்தல் ரோட்டில் சென்றார். திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

அப்போது அவருக்கு உதவுவதற்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் சுதாகரன் அசந்த ேநரம் பார்த்து அவரது செல்போனை திருடி அங்கிருந்து தப்பினார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுதாகரன் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்போன் திருடியது பீளமேடு பி.கே.டி 2-வது வீதியை சேர்ந்த திருமூர்த்தி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி ஈசானிமங்கலத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (26). இவர் கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் காணவில்லை.  

இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தகுமார் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மோட்டார் சைக்கிளை திருடியது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த மகேஷ்(26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்னர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Tags:    

Similar News