உள்ளூர் செய்திகள்
இளம் பெண்ணை ஏமாற்றி 27 பவுன் நகை-ரூ.5 லட்சம் மோசடி
தஞ்சையில் இளம் பெண்ணை ஏமாற்றி 27 பவுன் நகை-ரூ.5 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
தஞ்சாவூர்:
தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் கலைவாணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அங்கயற்கண்ணி (வயது 25). இந்நிலையில் கலைவாணன் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை மாதம்தோறும் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்.
இதனை அறிந்த மானோஜிபட்டியை சேர்ந்த தமிழரசன் தனது தாயார் தனலட்சுமி, மனைவி கோகிலா, சகோதரிகள் வினோதனா, சுமதி ஆகியோருடன் சேர்ந்து அங்கயற்கண்ணியிடம் எங்களிடம் பணம் கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும் என நைசாக பேசி அவரை ஏமாற்றினர். மேலும் அவரிடமிருந்து 27 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வாங்கினர். பல மாதங்களாக அங்கயற்கண்ணியிடம் இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து தான் கொடுத்த நகை, பணத்தைப் அங்கயற்கண்ணி திரும்ப கேட்டார். இதில் ஆத்திரமடைந்த தமிழரசன் உள்ளிட்ட 5 பேரும் பணம் திருப்பிக் கொடுக்க முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போதுதான் மோசடி செய்யப்பட்டோம் என்பதே அங்கயற்கண்ணி உணர்ந்தார்.
இது குறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.