உள்ளூர் செய்திகள்
மகளிர் கல்லூரி புதிய கட்டிடம் கட்ட ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டிய காட்சி.

ஆலங்குளத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல்

Published On 2022-05-14 09:48 GMT   |   Update On 2022-05-14 09:48 GMT
ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 2020-21 கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டு தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அரசு ரூ. 11.33 கோடி நிதி ஒதுக்கியது. இதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார்.

மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.,  மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி, ஆலங்குளம் ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் ஒன்றிய குழுத் தலைவர் காவேரி சீனித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார். 

மூன்று தளங்களுடன் 50 ஆயிரத்து 416 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் வகுப்பறை, அலுவலக அறை, பதிவு வைப்பறை, முதல்வர் அறை, மாணவர் கூட்டுறவு பண்டகசாலை, உடல் நல மையம், நூலகம், ஆய்வகம், கருத்தரங்கு கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளது. 

நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், கல்லூரி கல்வி இணை இயக்க உதவி இயக்குனர் மயிலம்மாள், கல்லூரி முதல்வர் கலைமகள், துணை முதல்வர் கோபால சுந்தர் ராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன், ஆலங்குளம் நகர தி.மு.க. செயலர் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News