உள்ளூர் செய்திகள்
சமுதாய நலக்கூடம் கட்ட அய்யாத்துரை பாண்டியன் அடிக்கல் நாட்டிய காட்சி.

பண்பொழியில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா

Published On 2022-05-13 08:57 GMT   |   Update On 2022-05-13 08:57 GMT
தென்காசி அருகே உள்ள பண்பொழியில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில்:

தென்காசி அருகே உள்ள பண்பொழியில் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மேல–ஊர்சாவடி சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. தொழில் அதிபரும், சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான அய்யாத்துரை பாண்டியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக பண்பொழி பேரூராட்சி கரிசல் குடியிருப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு கரிசல் குடியிருப்பு கிராமத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் மண்டபத்தை அமைத்து தருமாறு ஊர் பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் அதனை பார்வையிட்டு கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பண்பொழி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் நாகலட்சுமி, வார்டு கவுன்சிலர்கள் கணேசன், ஜோதி சுப்பையா கண்ணு, மாரி மற்றும் மேல ஊர்ச் சாவடி தேவர் சமுதாய நாட்டாமைகள், குமரேச ராஜா, அய்யாத்துரை பாண்டியன் பேரவைத்தலைவர் பழனிச்சாமி, செயலாளர் சரவண பாபு, பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பண்பொழி, கரிசல் குடியிருப்பு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News