உள்ளூர் செய்திகள்
தெய்வ வேடம் அணிந்தவர்கள் ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.

திசையன்விளை அருகே முத்தாரம்மன் கோவில் கொடைவிழா

Published On 2022-05-12 09:46 GMT   |   Update On 2022-05-12 09:46 GMT
திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவில் கொடைவிழா 4 நாட்கள் நடந்தது.
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவில் கொடைவிழா 4 நாட்கள் நடந்தது.

விழா நாட்களில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், வில்லிசை, இன்னிசை கச்சேரி, சிறப்பு அலங்கார பூஜை, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து யானை, குதிரை முன் சென்றது.

தொடர்ந்து அம்மன், நாரதர் உள்பட பல்வேறு தெய்வங்கள் வேடம் அணிந்தவர்களுடன் மேள தாளம் முழங்க பால்குட ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல் சுவாமி வீதி உலா, கிராமிய கலைநிகழ்ச்கள், அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News