search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amman temple"

    • துவராள்பதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்டுகபட்டியில் துவராள்பதி அம்மன்-7 கம்பை தெய்வங்கள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் தொடங்கியது.

    கணபதி பூஜை, நவகிரக ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம் முடிந்து முதற்கால யாக பூஜைகள் பூர்ணாகுதி உடன் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து மண்டப சாந்தி, பிம்பசுத்தி, லட்சுமி பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட இரண்டாம் கால பூஜைகள் பூஜைகள் நிறைவுபெற்றது.

    இதையடுத்து யாக சாலையில் இருந்த தீர்த்த குடங்களை ஏந்தி சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.
    • பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான்அருகேதேனூரில் சுந்தரவள்ளிஅம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு அம்மன் வந்து சேர்ந்தார்.

    அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர். மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரகாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    பக்தர்கள் சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புலி குத்தி ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து அம்மன் சிறிய கோவிலை வந்து சேர்ந்ததையடுத்து விழா முடிவடைந்தது.  

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    வேலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆடி மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையளட்டு வழிபட்டனர்.

    ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    அதேபோல் படவேடு ரேணுகாம்பாள் கோவில், கணியம்பாடி கடம்ப வனவாசவி அம்மன், சாத்துமதுரை துர்க்கையம்மன், திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் பொங்கலிட்டு, கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    • வடக்கு வா செல்வி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கியது.
    • நேற்று காலை பொங்கல் இடுதலும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், கிராமிய கலை நிகழ்ச்சியும் நடந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் திரிபுரசுந்தரி அம்மன், வடக்கு வா செல்வி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு திருவிளக்கு பூஜையும், மாகாப்பு பூஜையும் நடந்தது. 1-ந் தேதி காலை பால்குடம் எடுத்தலும், பின்னர் 12 மணிக்கு உச்சிகாலபூஜையும், 4 மணிக்கு தீர்த்தம் எடுத்து சாமி நகர்வலம் வந்தது. இரவு மோகன லட்சுமி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு மாவிளக்கு எடுத்தலும் ,சாம கொடை பூஜையும் நடந்தது. இரவு சப்ரபவனி வந்தது. நேற்று காலை பொங்கல் இடுதலும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. தொடகந்து அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றமும், 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மெலோடிஸ் இசை கச்சேரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மிகவும் பிரபலமானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் இருக்கும் இடம் முன் காலத்தில் தானியங்கள் விளையும் காடாக இருந்தது. ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் காலத்தில் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மன்னர் ஆட்சி நடந்தது. தாராசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து வந்தான்.

    அவன் சிவபெருமானை வழிபட்டு கடும் தவம் செய்து இறைவனை வணங்கி நிற்க சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் கடலுக்கு அப்பால் கோட்டை கட்டி அங்கே தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்கி பணிவிடை செய்து ஏவல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு தேவர்களாலும் மனிதர்களாலும் மற்றுமுள்ள விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது என்று ஈசனிடம் கனிந்து கேட்டுக் கொண்டான். அவன் கேட்டது போல் பகவான் அவனுக்கு வரங்களை அளித்தார். வரங்களைப் பெற்ற மமதையில் அன்னை உமாதேவியை மதிக்காமல் வணங்காமல் ஏளனமாக பேசினான்.

    7 கன்னியர்கள் போரிட்டனர் : இதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று சாபமிட்டாள். அன்னையின் சாபத்தை ஏளனமாக கருதிய அவன் கடும்கோபத்துடன் தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் மற்றுமுள்ள அனைவரையும் கொடுமைகள் செய்து துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் தாராசூரனின் கொடுமைகள் தாங்காமல் அன்னை பார்வதிதேவியிடம் அனைவரும் தங்கள் துன்பங்களை சொல்லி கண்கலங்கி நின்றனர். இதை கேட்ட உடன் அன்னை கொதித்து எழுந்து ஈஸ்வரனை வணங்கி தாரகனின் அக்கிரமங்களை எடுத்து சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வேண்டினாள். இதைக் கேட்ட இறைவன், தேவி! இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஆணினாலும் அவர்களது படைகளாலும் என்னை கொல்லக்கூடாது என்ற வரத்தை பெற்றவன் அவன்.

    ஆதலால் அவனை அழிப்பதற்கு என்னால் இயலாது. தேவி உன்னுடைய அம்சத்தில் 7 கன்னியர்களை உருவாக்கி அனுப்புவோம். இதைக் கேட்ட தேவி சர்வசக்தியுமான 7 கன்னியர்களை பிறப்பித்து அவர்களுக்கு தகுந்த ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் 7 பேரும் பூலோகம் வந்து தாராசூரனின் படைகளோடு போர் செய்தனர். கடுமையான போர் நடைபெற்ற போதிலும் தாரகனின் படைகளை அழிக்க முடியவில்லை. தாரகனின் படைகள் தரையில் சாய்ந்தாலும் அடுத்த நிமிடம் மீண்டும் உயிர்பெற்று எதிர்த்து நின்றனர்.

    தவக்கோலத்தில் தேவி : தெய்வ கன்னியர்களால் தாராசூரனை அழிக்க முடியவில்லை. இதைக் கண்ட தெய்வ கன்னியர்கள் 7 பேரும் துயருற்று என்ன செய்வது? என்று தடுமாறி நின்றனர். தேவலோகம் சென்றாலும் அவமானம் என்று நினைத்து அவர்கள் பூலோகத்தில் சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு ஆகிய பல இடங்களில் கோவில் கொண்டனர். தெய்வ கன்னியாகிய பராசக்தியின் அம்சமான குமரி பகவதி தேவலோகம் செல்ல மறுத்து கடலின் அருகில் இருக்கும் சீவலப்பாறை என்னும் இடத்தில் வந்து மறைவாக பல வருடங்களாக கடும் தவக்கோலத்தில் இருந்து வந்தாள். வருடங்கள் பல கடந்தது.

    வாணாசூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்கு தக்க தருணங்களை எதிர்பார்த்து நின்றாள். குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவர் அந்த சீவிலிப் பாறைக்கு சென்ற போது அந்த தாயாருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாள். தேவி அந்த அம்மாளை பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள்.

    அதற்கு அந்த தாயார், நான் உன்னை கூடையில் வைத்து எடுத்து செல்கிறேன். இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பதற்கு எண்ணம் கொண்ட தேவி சுமையை உண்டாக்கினாள். தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்து குழந்தையை இறக்கினாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாள்.

    சூரன் வதம் : அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். குமரி பகவதி மறைந்த பருத்தி விளையானது. தேவி அந்த விளையின் உரிமையாளரான சான்றோருக்கு தான் வந்திருப்பதை காட்சி கொடுத்தாள். அவரால் அன்னைக்கு பணிவிடை செய்யப்பட்டு அங்கு அன்னை கோவில் கொண்டாள்.

    வாணாசூரன் முதலானவர்களை வதம் செய்வதற்கு அதற்கு இசைந்த புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் நவமி வரை உள்ள 9 நாட்களில் முன் பகவானால் வதம் செய்வதற்கு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களை பூஜையில் வைத்து விஜயதசமி அன்று பூஜை செய்த பின் தனக்கு துணையாக அம்பும் வில்லும் சுமப்பதற்கு சான்றோர்களின் பரிவாரங்களும் நாதஸ்வர இசை முழங்க மேளதாளங்களுடன் அன்னை ஆண் போல் உடை அணிந்து குதிரை மேலேறி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஆக்ரோசத்துடன் மகாதானபுரம் கிராமத்தின் அருகில் வைத்து கொடியவன் சூரனிடம் போர் புரிந்து அவனையும் அவனது ஆய பலங்களையும் சில நிமிடங்களில் அழித்து வெற்றிக்கொடி புனைந்து கடலில் நீராடி முன் போலவே வந்து நின்று தவக்கோலம் கொண்டாள்.

    மேலும் சீவிலிப் பாறையில் தேவி சின்னக் குழந்தையாக உருவத்தில் வாழ்ந்த போது தவம் செய்து ஓடி ஆடி விளையாடிய அம்பிகையின் கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் விவேகானந்தா கமிட்டியினரால் விளக்கேற்றி பூஜைகள் செய்யப்பட்ட் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூரன் வதம் முடிந்து வாகனத்தில் வெற்றி நடை போட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி அன்னை கன்னியாகுமரி கோவில் வந்து தவக்கோலம் அடைந்தாள்.

    அன்று முதல் இன்று வரை கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்து கொண்டு மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.

    கோவிலுக்கு செல்லும் வழி: நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 240 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரி அமைந்துள்ளது.

    • சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    வடக்கு மாமல்லபுரம் கிராம பொதுக் கோவிலான, கங்கையம்மன், ஊத்துக்காட்டு அம்மன் கோயிலில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னிதி விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    70ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகத்தைகான தேவநேரி, வெண்புருஷம், பட்டிபுலம், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, பெருமாளேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    கோவிலின் தர்மகர்த்தா ராமலிங்கம், செயலாளர் லோகநாதன், பொருளாளர் பழனிவேல், கிட்டு, கேசவன், அன்பு, ரங்கநாதன், ஜெயராமன், கவாஸ்கர், மகேஷ் மற்றும் வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது
    • இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வெள்ளிரவெளியில் புகழ்பெற்ற கரியகாளியம்மன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கரியகாளியம்மன் பரிவார மூர்த்திகளுடன் வடதிசை நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார். இந்த கோவிலானது வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்டது.

    கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது. கோவிலின் இடது புறத்தில் வடக்கு முகமாக கருப்பண்ணசாமி சன்னதி அமைந்துள்ளது. கோவில் உட்பிரகாரத்தில் கொடிக்கம்பமும், சிம்ம வாகனத்துடன் பலி பீடமும், வடமேற்கே 3 பெரிய குதிரை மற்றும் காளை சிலைகள் அமைந்துள்ளன. தென்மேற்கு மூலையில் கிழக்கு முகமாக விநாயகர் சன்னதியும், அர்த்தமண்டபத்தில் விநாயகரும், கருவறையில் கரியகாளியம்மனும் எழுந்தருளியுள்ளனர். கோவில் தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.

    இங்கு அம்மனிடம் வந்து மனமுருக வேண்டினால் வேண்டுவன நிறைவேறும் என்பது அனைத்து ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனை வணங்கினால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பதும் கண்கண்ட உண்மை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நல்ல காரியங்கள் தொடங்கும் முன் கோவிலில் பூ போட்டு அம்மன் உத்தரவு கேட்பதும், இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.

    7 ஊர் திருவிழா

    இந்த கோவிலின் தேர் 200 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு ஸ்கை லார்க் நாவுக்கரசு குடும்பத்தினர், ஆண்டவர் ராமசாமி குடும்பத்தினர், கே.பழனிச்சாமி குடும்பத்தினர், சென்னியப்பா டெக்ஸ் சென்னியப்பன், கோவிந்தராஜ் குடும்பத்தினர், திருமால் டெக்ஸ் முருகேசன் குடும்பத்தினர், சந்த்ரு பிராசஸ் சதாசிவம் குடும்பத்தினர் இணைந்து ஏற்படுத்திய கரியகாளியம்மன் சேவா டிரஸ்ட் சார்பில் கோவிலுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வழங்கப்பட்டு, கோவில் கோபுரம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இவர்களுடன் 7 ஊர் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தினர். இதை தொடர்ந்து தேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேர் மற்றும் குண்டம் திருவிழாவை மாங்குட்டை ஈஸ்வரன், கோவில் தர்மகர்த்தா மோகன்குமார் தலைமையிலும், வெள்ளிரவெளி நாட்டாமைக்காரர் பழனியப்ப முதலியார், புள்ளிக்காரர் ஆறுமுகம், தேர் கமிட்டியுடன் சேர்ந்து 7 ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மாவிளக்கு ஊர்வலம்

    தற்போது 12-ம் ஆண்டு குண்டம், தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. கொடியேற்றம் நேற்றுமுன்தினம் நடந்தது. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களை சேர்ந்த பெண்கள் கரியகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டமும் நடந்தது.

    பின்னர் பெண்கள் மாவிளக்குடன் கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் பொங்கல் வைத்து, அம்மை அழைப்பு நடந்தது. மேலும் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக கோவிலின் முன் குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு இதற்கான சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    குண்டம், தேரோட்டம்

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. காலை 5 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். இதில் சுற்றுவட்டார ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள். குண்டத்திற்கு பின் காலை 10.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேர் வடம் பிடிக்கப்பட்டு மேற்கு திருப்பி நிறுத்தப்பட்ட பின் மீண்டும் மாலையில் வடம் பிடிக்கப்பட்டு மாரியம்மன் கோவில் அருகில் நிறுத்தப்படுகிறது. இரவு தங்கலுக்கு பின் 2-வது நாளாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி தேர் நிலையை சென்றடைகிறது.

    வருகிற 24-ந்தேதி காலை 9 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கு நடக்கிறது. 25-ந்தேதி மாலை 6 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு மாரியம்மனுக்கு அபிேஷகமும், 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுஅபிேஷக பூஜை, பொன்னூஞ்சல் நடக்கிறது. 28-ந்தேதி காலை 9 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு அடசல் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    தயார் நிலை

    தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பக்தர்கள் நெரிசல் இன்றி குண்டம் இறங்குவதற்கு வசதியாக கோவிலின் முன் பகுதியில் மூங்கில் கம்புகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் மற்றும் தேரோட்டம் ஆகியவை நடப்பதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    அம்பாளை வழிபடும் சமயத்தை ‘சாக்தம்’ என்று அழைப்பார்கள். அம்மனையே, இந்த உலகத்தின் மூலமுதற்கடவுளாகக் கொண்டது, அந்த சமயத்தின் கொள்கை. அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மதுரை மீனாட்சி

    மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது. சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்றது மதுரை நகர் என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தில் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுைர மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.

    காஞ்சி காமாட்சி

    காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர்களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘காமகோடி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.

    கன்னியாகுமரி பகவதிதேவி

    முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘குமரி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. பரசுராமர், பகவதி அம்மனின் திருவுருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.

    சமயபுரம் மாரியம்மன்

    திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து ‘சமயபுரம் மாரியம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் ‘பூச்சொரிதல்’ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.

    பொள்ளாச்சி மாசாணியம்மன்

    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார்.
    சிவாலயங்கள் பலவற்றுக்கும் இல்லாத ஒரு விசேஷம் சிதம்பரத்துக்கு உண்டு. மூலவரும் உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு எங்கும் காணாத அதிசயம். அதைப்போல் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே. இன்னொரு சிறப்பம்சம் இங்கே கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். பொதுவாக காளி, துர்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் கிழக்கு நோக்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    குழந்தைப்பேறு வேண்டிவரும் பெண்களுக்கும், திருமணத்தடையைப் போக்கவேண்டி வருவோருக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடை அம்மன். இதைத்தவிர, சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டுமென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். கேட்பவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாகத் திகழ்கிறாள்.

    காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’ காட்சி தருகிறது. இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள்புரிகிறார்.

    தலவரலாறு:

    ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்தது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றைச் சமன்படுத்தி மக்கள் குடியேறியதால், 'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று. காரைக்குடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செஞ்சை சங்கராபுரம். இங்கு காட்டம்மன் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்காள் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடை நாயகிக்கோ பிள்ளைகள் இல்லை.

    அக்காளின் குழந்தைகளைப் பார்க்க அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளைச் செய்து எடுத்துக்கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால், அக்காளுக்கோ புத்தி கோணாலாக வேலை செய்தது. தன் தங்கை, தனது பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால், தன் பிள்ளைகளை ஒழித்து வைத்துவிட்டு தங்கையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த கொப்புடை நாயகி, 'ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை இனி பார்க்க வரமாட்டேன்' எனக் கூறி உக்கிரமாகப் போய் அமர்ந்து விட்டார். அக்கா தன் தவற்றை உணர்ந்து கலங்கினார். கொப்புடை நாயகி தன் அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோயிலின் தலவரலாறு.

    ஆதிசங்கரர் தனது ஶ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்த ஆலயத்துக்குள் அருகில் வரும்போதே இதன் ஆகர்ஷண சக்தியை நம்மால் உணர முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடைநாயகி அம்மன் !காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.

    சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

    சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

    சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

    சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும்.

    இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
    சாத்தான்குளம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோவிலில் வருடாந்திர கொடை விழாவையொட்டி விளக்கு பூஜை நடந்தது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் கரிசல் முத்தாரம்மன் கோவிலில் வருடாந்திர கொடை விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

    தொடர்ந்து யாகசாலை பூஜை, விமான அபிஷேகம், முத்தாரம்மன், மாரியம்மன், பெரியம்மன், உஜ்ஜினியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேம் நடந்தது.  சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானம் நடந்தது. 

    இரவு 7 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 2-வது நாள்  வில்லிசையும், சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது. 

    மஞ்சள் பெட்டி ஊர்வலமும், சிறப்பு அலங்கார பூஜையும்,கும்பம் தெரு வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 3-வது நாள் வில்லிசையும், சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. 

    இரவு 7 மணிக்கு நாட்டில் நல்ல கன மழை வேண்டி 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை அம்பிகை தாசன் ஆர்.ஜி.பாலன் நடத்தினார். 

    இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. 4-வது நாள் கொடை விழா நிறைவு பூஜையும், வரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கொடை விழா குழுவினர் மற்றும் கரிசல் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற னர் முன்னோர்கள். ஆனால் இங்கு கோவிலே ஊராக உள்ளது என்று சொல்லலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அம்மன், கோவில்களில் தெய்வமாக இருந்து பக்தர்களை தங்களது கடைக்கண்களால் பார்த்து, வளம் பெற செய்து வருகிறார். அந்த வரிசையில் கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அம்மன்கள் அனைத்து ஊர்களிலும் காவல் தெய்வமாகவும், பலருக்கு குல தெய்வமாகவும் குடி கொண்டுள்ளனர்.

    அஞ்சாக்கவுண்டன்பட்டி பெரியநாயகியம்மன், அணைப் பாளையம் கொளப்பியம்மன், அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சியம்மன் மற்றும் சின்ன பொன்னாச்சியம்மன், அரவக்குறிச்சி கன்னி–மாரியம்மன், அரவக்குறிச்சி முத்தாலம் மன், ஆண்டாங்–கோவில் ஏலரம்மன், ஆதனூர் முத்தாலம்மன், ஆதனூர் ஜக்காளம்மன், ஆதிநத்தம் பிடாரி சடச்சியம்மன், ஆர்ச்சம்பட்டி எல்லையம்மன், இரண்யமங்கலம் கன்னிமாரம் மன், இனங்கூர் கன்னிமார், மதுரைவீரசாமி, இனுங்கனூர் கன்னிமார், இனுங்கனூர் செல்லாண்டியம்மன், இனுங்கூர் எல்லையம்மன், இனுங்கூர் பிடாரியம்மன், உப்பிடமங்கலம் எல்லையம்மன், ஓடுகம்பட்டி மாரியம்மன், கஞ்சமனூர் மாரியம் மன், கரூர் புற்றுக்கண் மாரியம்மன், நவக்கிரக தலம்,

    கரட்டுப்பட்டி கொடிக்கார மாரியம்மன், கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன், கருவப்பநாயக்கன்பட்டி மாரி யம்மன், கரூர் எடுப்பாளம்மன், கரூர் மாரியம்மன், கல்லடை கரையடி கன்னிமார், கள்ளப்பள்ளி காமாட்சியம்மன், கள்ளை பூக்குழி கன்னிமார், கள்ளை மாரியம்மன், காக்காவாடி கஸ்பா ஊத்துக்கரை கன்னிமார், காருடையாம்பாளையம் மேலப்பட்டையம்மன், காளையாப்பட்டி அழகநாச்சியம்மன், கிருஷ்ணராயபுரம் பிடாரி அழகுநாச்சியம்மன், குப்பாச்சிப்பட்டி எல்லையம்மன், குளித்தலை ராமலிங்க சாமுண்டீஸ்வரியம்மன், கொக்காணிபாளையம் செல்லாண்டியம்மன், கொசூர் குள் ளாயி அம்மன், கொசூர் ஜக்காளம்மன், கொளக்காரன்பட்டி துர்க்கையம்மன், கோட்டைபுளிப்பட்டி மாரியம்மன், கோடங்கிப் பட்டி முத்தாலம்மன், கோடந்தூர் காளியம்மன், கோடாந்தூர் சந்திரசேகர பிடாரியம்மன், கோடாந்தூர் பெரிய நாயகியம்மன், கோதூர் கோதையம்மன், கோயம்பள்ளி செல்லாண்டியம்மன்,

    சரக்கம்பட்டி ஜக்காளம்மன், சாந்துவார்பட்டி பாம்பாலம்மன், சிந்தலவாடி நாச்சிமாரம்மன், பெரியகாண்டியம்மன், சிந்தா மணிப்பட்டி பிடாரி மாரியம்மன், சிவாயம் அங்காளம்மன், சிவாயம் கன்னிமார், சிவாயம் மாரியம்மன், சின்ன சேங்கல் பிடாரியம்மன், சின்னதாராபுரம் மாரியம்மன், சின்னதேவன் பட்டி வீரமலைக்கன்னிமார், சின்னப்பனையூர் மாரியம்மன், சின்னமலையாண்டிப்பட்டி மாரியம்மன், சின்னியம்பாளையம் மாரியம்மன், சுக்காலியூர் பகவதியம்மன், செம்பியாநத்தம் நத்தமேடு பிடாரியம்மன், செம்பியாநத்தம் பட்டத்தளச்சியம் மன், செம்பியாநத்தம் மாரியம்மன், செவ்வந்திபாளையம் காளியம்மன், சேங்கல் எல்லையம்மன், தண்ணீர்பள்ளி இசக்கியம்மன், தரகம்பட்டி பகவதியம்மன்,

    தளவாய்ப்பாளையம் மாரியம்மன், தாந்தோன்றிமலை பூமா தேவி, தாளியாம்பட்டி மாரியம்மன், திருமாணிக்கம்பட்டி கன்னிமார், துக்காச்சி அகிலாண்டம்மன், தென்னிலை சீலக்காம்பட்டி ஜக்காளம்மன், தொண்டமாங்கினம் மாரியம்மன், தொண்டமாங்கினம் வீரமலைக் கன்னிமார், நங்கவரம் அரிசன மாரியம்மன், நங்கவரம் பகவதியம்மன், நங்கவரம் பிடாரியம்மன், நஞ்சை காளக்குறிச்சி குங்குமகாளியம்மன், நஞ்சைக்காளக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைகடம்பங்குறிச்சி செல்லாண்டியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மலையம்மன்,

    நஞ்சைப்புகழூர் மாரியம்மன், நஞ்சைபுகர் கண்டியம்மன், நடுப்பட்டி பெரியகாண்டியம்மன், நல்லமுத்துப்பாளையம் செல்லாண்டியம்மன், நல்லூர் மாரியம்மன், பிடாரியம்மன், நன்னியூர் குமாரசாமி பவனியம்மன், நாகம்பள்ளி துர்க் கையம்மன், நாகனூர் மாரியம்மன், நாகனூர் ஜக்காளம்மன், நெடுங்கூர் பிடாரி காளியம்மன், நெரூர் காளியம்மன், நெரூர் நீலியம்மன் மாரியம்மன், நெரூர் பெரியகாண்டியம்மன்.

    பசுபதிபாளையம் பகவதியம்மன், பசுவப்பட்டி செல்லாண்டியம்மன், பசுவப்பட்டி மகாலட்சுமி, பஞ்சப்பட்டி பிடாரி, பஞ்சப்பட்டி மாரியம்மன், பண்ணப்பட்டி எல்லையம்மன், பணிக்கம்பட்டி காளியம்மன், பனையூர் மாரியம்மன் வீரமா காளியம்மன், பள்ளப்பட்டி கரியகாளியம்மன், பள்ளப்பட்டி செல்லாண்டியம்மன், பள்ளப்பட்டி மாரியம்மன், பாகநத்தம் அழகாபதியம்மன், பாதிரிப்பட்டி மாரியம்மன், பாப்பக்காப் பட்டி பள்ளர் மாரியம்மன், பாப்பக்காப்பட்டி ஜக்காளம் மன், பாப்பயம்பாடி எல்லையம்மன், பால்ராஜபுரம் அறவ முடிச்சம்மன், பாலவிடுதி அங்காளம்மன், பாலவிடுதி கனவாய் கன்னி மாரம்மன்,

    பாலவிடுதி தூலிப்பட்டி பிடாரி, பாலவிடுதி மாரியம்மன், பாலாம்பாள்புரம் காமாட்சியம்மன், பாலாம்பாள்புரம் பகவதியம் மன், பில்லூர் கன்னிமார், பில்லூர் பட்டத்தலச்சியம்மன், பில்லூர் பிடாரியம்மன், புஞ்சைகடம்பங்குறிச்சி மாரியம்மன், புஞ்சை காளக்குறிச்சி சின்னம்மன், புஞ்சைகாளக்குறிச்சி பகவதியம்மன், புஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், புஞ்சை புகளூர் மாரியம்மன், புத்தாம்பூர் மாகாளியம்மன், புத்தூர் பட்டத்தலச்சியம்மன், புத்தூர் மலைவளர்ந்தம்மன், புதுக்க நல்லி அணைப்பாளையம் கங்கையம்மன், புதுப்பட்டி ஜக்காளம் மன், புலியூர் எல்லையம்மன், புலியூர் காளியம்மன், புழுதேரி பிடாரி யம்மன், புனவாசிப்பட்டி மாரியம்மன், பூலாம்பட்டி ஜக் காளம்மன்,

    பெரியபனையூர் பெரியகாண்டியம்மன், பொய்யாமணி மகாமாரியம்மன் வலம்புரிவிநாயகர், பொரணி செல்லாண்டி யம்மன், பொருந்தலூர் அங்காளம்மன், பொருந்தலூர் கள்ள நாயக்கன்பட்டி முத்தாளம்மன், பொருந்தலூர் பகவதியம்மன், பொருந்தலூர் மாரியம்மன், பொருந்தலூர் முத்தாலம்மன், பொருந்தலூர் மருதகாளியம்மன் கோவில் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று.
    கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். சக்திவாய்ந்த அம்மன் என்றும் கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்றும் பக்தர்களால் நம்பிக்கையுடன் வழிபட்டு வரப்படுகிறது.

    கரூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்யதிசை பார்வையுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக இக்கோவில் விளங்குகிறது. சுமார்100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான்தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துவந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். கோவிலில் பரம்பரை அறங்காவலராக முத்துக்குமார் உள்ளார். இவரது முன்னோர்கள் இந்த கோயிலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

    திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு, உருவார பொம்மை, அலகு குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனின் அருளை பெறுகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருவிழா அன்று பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே முகமது என்ற முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் முன் நின்று நடத்தி வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

     இன்றும் அவை தலைமுறை, தலைமுறையாக தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது தனி சிறப்பு. மேலும் அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும் அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாக்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கோவிலில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவில் திருவிழா அன்று கம்பம் ஆற்றில் விடுவது வெகு விமரிசையாக நடைபெறும். கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும்.

    பின்னர் மாரியம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். அப்போது கம்பத்திற்கு காவலாக மாவடி ராமசாமி அம்சமாக அரிவாள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு ஆற்றுக்கு அனுப்பும் கம்பத்திற்கு சில வரலாறுகள் உண்டு. மஞ்சள் நீர் கம்பம் என்பது கடவுளை குறிக்கும். கடவுளின் பிரதிபலிப்பே கம்பம் எனப்படுகிறது. சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகவே கம்பம் உள்ளது.

    ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள். கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஓவ்வொரு ஆண்டும். கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி கண்டிப்பாக மழை பெய்து விடுகிறது.

    கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் நிறைந்தது. வெண்டா மண் என்று அழைக்கப்படும் இந்த திருநீற்றை பக்தர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், கண் சம்பந்தமான நோய்கள், தோல் நோய் போன்ற நோய்கள் தீர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு அரிய வகை மண், தெய்வீக சக்தி கொண்டதும், பல மருத்துவ குணங்கள் அடங்கியும் உள்ளது.

    அம்மனுக்கு மாவிளக்குக் காரி என்ற பெயரும் உண்டு. அவள் திருவிளையாடலில் கண் வலி, பிடரி வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னல் படுவோர் மா விளக்கு எடுத்து நெய் விளக்கேற்றி கோயிலின் முன் தன் நேர்த்திக்கடனை செலுத்தினால் பிணியெல்லாம் பனி போல் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    துன்பம், துயரம், கஷ்டம், இன்னல், இடர் ஏற்படுவதா, ஏற்படுத்திக் கொள்வதா, இதைக் கேள்வியாக முன் வைத்தால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது தான் சரியாகும். அதற்குத் தீர்வு காண அம்மன் சன்னதி, மனதிற்கு நிம்மதி தரும் அந்த சன்னதிக்கு நாமே நம் மனக்கட்டுப்பாடோடு சில நியதிகளை வகுத்துக் கொண்டு நேர்த்திக் கடன்களாய் செய்வதுதான்;

    சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டை அடித்து தவமிருந்து பெற்ற குழந்தையை கரும்புத் தொட்டிலிட்டு, அக்னியாய் செங்கதிராய் எழும் தீச்சுடர் சட்டியை கரங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வழிநெடுக ஊற்றப்படும் எண்ணெய் வேகத்திலும் பைய நடை பயின்று ஆலயம் சேர்க்கும் அழகு தனியழகு. உள்ளம் வருத்தி உயிர் மெய் உருக்கி மேனியெல்லாம் அலகு, நாக்கில் அலகு, இடுப்பில் பெரிய அலகு, முதுகுதண்டில் அலகு குத்தி ஏற்ற வண்டியின் மேல் நிறுத்தி பறக்கும் காவடி, பறவைக் காவடி இப்படி எண்ணற்ற காவடிகளை எண்ணமெல்லாம் நிறைந்த தாய்க்கு தன் நேர்த்திக் கடனாய் செலுத்துவதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய கரூர் மாரியம்மன் திருவிழா

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கரூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் 3 ஆண்டுகளாக இத்திருவிழா தடைபட்டது.

    இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. கம்பம் நடுதல் என்பது கோயில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாள்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய கூட்டம் தினந்தோறும் அலைமோதும்.

    தொடர்ந்து 13-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரத்தில் பகுதிவாரியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 23ஆம் தேதி திருத்தேர், மாவிலக்கு, அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இறுதி நிகழ்ச்சியாக வரும் மே 25-ந்தேதி புதன்கிழமை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்ட நிகழ்ச்சியாக கரூர் மாரியம்மன் திருவிழா நிறைவுபெறுகிறது. கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி விழாக்குழுவினர் மற்றும் காவல் துறை உள்ளிட்ட இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரார்த்தனை தலம்

    கரூரில் கருணை வடிவாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மாரியம்மன் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை வேரறுத்து இன்மையிலும், நன்மையுடன் வாழ வைக்கும் பிரார்த்தனை தலமாக இந்த கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. வழிப் போக்கர், வாசலில் நின்று வணங்கி செல்லும் பக்தர்க ளின் குறைகளை கூட தன தாக்கிக்கொண்டு அவர்கள் வாழ்வின் தடைகளை போக்கி மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்வை தொடர வைக்கும் தெய்வமாக திகழ்ந்து வருகிறாள்.

    அக்னி சட்டியும், அலகு குத்துதலும் நேர்த்திக்கடன்

    ஆன்மீகமாக இருந்தாலும், அறிவு சார்ந்த நிகழ்வாக இருந்தாலும் எதையுமே கூலி இல்லாமல் அரிதாக வாங்கி விட முடியாது. அதன் பலனை அனுபவித்ததற்கான கூலியை அளித்தே ஆகவேண்டும். அறிவுசார் நிகழ்வுக்கு அதிக மாகவும், அம்மனுக்கு தன்னால் இயன்றதையும் செய்வது சாலச்சிறந்தது. அந்த வகையில் கண்ணீருடன் மருகி நிற்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் கரூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார்கள். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசே கம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

    வீடுகளில் மஞ்சள் நீருடன், தயிர் சாதம் படைத்து வழிபட்ட பக்தர்கள்

    கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க வரவேண்டாம்.

    தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப் பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து வழிபாடு செய்து, தயிர் சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மஞ்சள் நீர் வைத்து, கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து, தயிர் சாதம் படையலுடன் வழிபாடு செய்தனர்.

    பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இந்த திருவிழா ரத்து இருந்தபோதிலும் நோயற்ற வாழ்வை கரூர் மாரியம்மன் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.

    கரூர் மாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்த கே.பி.சுந்தராம்பாள்

    மாரி என்றால் மழை என்பது பொருள். மாரியம்மன் என்றால் அருள்மழை பொழியும் தெய்வம் என்பது தெளிவு. எல்லை தெய்வமாய் மக்களை காக்கும் அன்னையாய் கருணையே வடிவான தாயாய், கற்பக விருட்சமாய் மாரி விளங்குவதற்கு ஆண்டு தோறும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே சாட்சி.

    எத்தனையோ பேர் வாழ்வில் எத்தனை, எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவை வெளியுலகிற்கு தெரியாததே அதிகம் எனலாம். முக்கிய பிரமுகர்கள் பலரும் அன்னையின் அருள் மழையில் நனைந்து உள்ளனர் என்பதற்கு பலரது மாட்சியும், சாட்சியும் இன்றளவும் ஒளியாய் திகழ்கிறது.

    அந்த வகையில் வெள்ளித்திரையில் வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரியான கொடுமுடி கோகிலம் என்ற கே.பி.சுந்தராம்பாள் வெண்கல அக்னி சட்டியேந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெருமை பெற்றது இந்த கரூர் மாரியம்மன் கோவில்.

    இன்னல் நீங்க வேண்டி எத்தனையோ ஆயிரம் பேர் அக்னிசட்டி ஏந்தி வருகிறார்கள். எத்தகையோ பக்தர்கள் 10, 12 அடி நீளமுள்ள அலகு குத்தி வருகிறார்கள். சில பக்தர்கள் பறக்கும் காவடி பாடைக்காவடி, விமான காவடி எடுத்துஅங்கப் பிரதட் சணம் செய்து கொஞ்சும் மழலைவேண்டி வணங்கி, பின்னர்மாரி அருளால் வந்த குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வருவதே பேரழகு தான்.

    சிலர் கரும்புள்ளி, செம் புள்ளி குத்தி குழந்தை வரம் வேண்டுதல், முடிக்காணிக்கை செலுத்துவது, பல்லாயிரம் மாவிளக்கு வைத்தல் என எத்தனை வழிபாடு. அம்மாவாம் கருவூர் மாரிகுழந்தைகளின் உடம்பிலே விளையாட்டாய், விளையாட்டு அம்மையாய் விளையாடும் அழகு தான் எத்தனை. அழகு செதுக்கிய முத்துக்களாய் கோர்த்த மாலையாய் அவர் பார்க்கும் அழகும் வேப்பிலையும், அபிஷேக தீர்த் தமும் வந்த வேகத்தில் வடியும் அழகும் அம்மையின் திருவிளையாடல் அல்லவா! லட்சோப லட்சம் மக்கள் ஆம் பிராவதி எனும் அமராவதி ஆற்றின் கரையில் கூடி வழிபடும் இப்பெருவிழாவை காணாதவர்கள் கண்டு களிக் கவும் அம்மனை தரிசிக்கவும் அழைக்கிறார்கள் அம்மனின் தீவிர பக்தர்கள்.
    ×