உள்ளூர் செய்திகள்
நன்னிலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள முடிகொண்டான் திருமலை ராஜன் ஆற்றுபாலம் அருகில், பனங்காட்டான்குடி தமிழர் தெருவை சேர்ந்த சரவணன் மனைவி ரம்யா (வயது 23). இவர் நன்னிலம் தனியார் திருமண மண்டபத்தில், தனது உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு, வந்து கலந்துகொண்டு, திரும்பி இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது, ரம்யாவின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் ரம்யாவின் கழுத்திலிருந்த, தாலி செயினை, பறிக்க முற்பட்டனர்.
ரம்யா சுதாரித்துக்கொ ண்டு தாலிச் செயினை, கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் இரண்டு பவுன் செயின் ரம்யா விடமும், 2 பவுன் செயினை மர்மநபர்கள் அறுத்து சென்றனர். இதுபற்றி ரம்யா நன்னிலம் போலீசில் புகார் தெரிவிக்க, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.