உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் வட்டமலை ஜோதிநகர் மாரியம்மன் திருவிழா
குமாரபாளையத்தில் வட்டமலை ஜோதிநகர் மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் வட்டமலை ஜோதிநகர் மாரியம்மன் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
நேற்று இரவு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார்.
கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பொங்கல் விழா நடைபெற்றது.