உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Published On 2022-05-04 07:14 GMT   |   Update On 2022-05-04 07:14 GMT
நன்னிலம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து ெகாண்டார்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குச்சிபாளையம் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மனைவி கற்பகம் (வயது 70). இவர் தனது வயது முதிர்வின் காரணமாக, சற்று மனநிலை பாதித்த மாதிரி சமீப காலங்களில் இருந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கற்பகம் இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News