உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஷா நகர் பகுதியில் நேற்று அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தா பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இந்தனர்.
அப்போது ஷா நகர் சுடு காடு அருகே சென்ற போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் 100 கிராம் கஞ்சாவை தவறவிட்டு தப்பி ஓடினார். தவற விட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை பற்றி விசாரணை நடத்தியதில் அரக்கோணம் ஷா நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் என்று தெரியவந்தது.
தப்பியோடிய வாலிபரை அரக்கோணம் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.