உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

போரூர் மின் மயானம் 20 நாட்கள் செயல்படாது- மாநகராட்சி அறிவிப்பு

Published On 2022-05-03 06:52 GMT   |   Update On 2022-05-03 06:52 GMT
போரூர் மயான பூமயினை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளதால் இன்று (3ந் தேதி முதல் வருகிற 22ந் தேதி வரை) 20 நாட்களுக்கு இயங்காது.

சென்னை:

போரூரில் உள்ள மின்சார மயானத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மின்மயானம் வருகிற 22ந் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வளசரவாக்கம் மண்டலம், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள போரூர் மின்சார மயான பூமியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி (சிம்னி) பழுதடைந்துள்ளது. எனவே, போரூர் மயான பூமயினை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளதால் இன்று (3ந் தேதி முதல் வருகிற 22ந் தேதி வரை) 20 நாட்களுக்கு இயங்காது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள வார்டு 149க்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News