உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

2 ஆண்டுக்கு பிறகு இன்று முதல் ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்

Published On 2022-05-02 10:17 GMT   |   Update On 2022-05-02 10:17 GMT
2 ஆண்டுக்கு பிறகு இன்று முதல் ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ரத்து செய்யப்பட்ட பல்வேறு ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த  2 ஆண்டுகளாக ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ெரயில் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் ரெயில் பயணிகள் மீண்டும் அந்த  ரெயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயிலை இன்று முதல் இயக்க முடிவு செய்துள்ளது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து 3.10 மணியளவில் புறப்பட்டு திருப்பத்தூர், காக்கங்கரை, குன்னத்தூர், சாம்பல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூர், தொங்கனூர், புத்திரெட்டிபட்டி, பொம்முடி, லோகூர், டேனிஷ்பேட்டை, தின்னப்பட்டி, கருப்பூர், சேலம், வீரபாண்டி ரோடு, மகுடஞ்சாவடி, மாவெள்ளிபாளையம், சங்கரிதுர்க், ஆனங்கூர், காவிரி, ஆகிய வழித்தடங்களில் நின்று இறுதியாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவு 7. 45 மணியளவில் சென்றடையும்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் காலை 6.25 மணியளவில் புறப்பட்டு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு பிற்பகல் 12.10 மணியளவில் வந்து அடையும்.
Tags:    

Similar News