உள்ளூர் செய்திகள்
தளிக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பால்சொசைட்ட

இணைப்பு சாலை பணிகளை முழுமையாக முடிக்க கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-05-02 09:38 GMT   |   Update On 2022-05-02 09:39 GMT
சம்பட்டிகுடிக்காடு- தளிக்கோட்டை இணைப்பு சாலையை முழுமையாக முடிக்க வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடி;

திருவாரூர் மாவட்டம் தளிக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் தலைமை தாங்கினார். 

உதவி மண்டல அதிகாரி மகாலட்சுமி, பால்சொ–சைட்டி நிறுவன தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரமேஷ், துணை ஊராட்சி மன்ற தலைவி கண்ணனி, பெற்றோர் ஆசிரியர்  சங்க தலைவர் குமார் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சம்பட்டிக்குடிகாடு- தளிக்கோட்டை இடையேயான இணைப்பு சாலை பணிகளை முழுமை–யாக வும், தரமாகவும் முடிக்க வேண்டும், தளிக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் , 

கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக மாற்றி தர வேண்டும், மருத்துவருக்கு தங்கும் வசதி கொண்டி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News