search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை மருத்துவமனை"

    • இரவு நேரங்களில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டி, புதூர், தாளநத்தம் உள்ளிட்ட சுற்று பகுதிகளி ல் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் கால்ந டைகளை சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை பெற அவர்களின் வசதிக்காக புட்டிரெட்டிப்பட்டி கூட்ரோடு அருகே கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது.

    மருத்துவமனையின் சுற்று சுவர் இடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் அது சரி செய்யாததாலும் கேட் பூடப்படாத நிலையில் இருப்பதாலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதனை மது குடிக்கும் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    மேலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்றது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி :

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2023-

    2024-ம் நிதி ஆண்டுக்கான நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் கொட்டா ரம், மயிலாடி, பறக்கை ஆகிய 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்து வமனைகளில் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த புதிய கட்டிடங் களின் திறப்பு விழா கொட்டாரம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பூதலிங்கம் தலைமை தாங்கி னார். நாகர்கோவில் உதவி இயக்குனர் டாக்டர் நோபிள், நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொட்டாரம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாநில தி.மு.க.வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வ ரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தக்கலை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்கு னர் டாக்டர்எட்வர்ட் தாமஸ், கால்நடை பல்கலைக் கழக உதவிபேராசிரியர் டாக்டர் ஜெனசிஸ், பொதுப் பணித் துறை செயற்பொறி யாளர் வேலுசாமி, உதவி செயற் பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரித் துரை, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது.
    • பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் சி.பொன்னுசாமி கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    இடுவாய் கிராமத்தில் உள்ள சீரங்ககவுண்டன்பாளையம், சின்னக்காளிபாளையம், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரே ஒரு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவருக்கு உதவியாக கால்நடை ஆய்வாளரோ, கால்நடை பராமரிப்பு ஊழியரோ இல்லை. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் கால்நடைகள் சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள இடத்திற்கு புதிதாக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் திருப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்படுகிறது. ஆனால் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை உள்ள சமயம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்பவும், பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது. எனவே கால்நடை மருத்துவமனை நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து செயல்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். 

    • கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
    • மதியம் 2 மணிக்கு பணி முடிந்த பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.இம்மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது.சிறு, குறு விவசாயிகள், தங்கள் நிலங்களில் விவசாயப்பணிகளை மேற்கொள்வதுடன் அருகிலுள்ள நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்து திரும்பிய பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என மாற்றியமைத்தால், மருத்துவமனைகளின் செயல்பாடு பயனற்றதாகி விடும்.

    ஆய்வுப்பணிகள், அவசர சிகிச்சை, விரிவாக்கம், திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க, டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் செல்வது வழக்கம்.கால்நடை மருத்துவமனைகளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, யாராவது ஒருவர் பணியில் இருந்தாலும், முதலுதவி போன்ற உதவிகளை செய்ய முடியும்.மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிந்தால் மறுநாள் காலை 8மணி வரை, அதாவது, 18 மணி நேர இடைவெளியில் எவ்வித கால்நடை மருத்துவ சேவையும் கிடைக்காது.கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ளதால் நோய்த்தாக்குதல், அடிக்கடி ஏற்பட்டு பரவி வருகிறது.

    இவ்வகை கால்நடைகளை கட்டி வளர்க்கும் நிலையில், மருத்துவ ஊழியர்களை, விளைநிலங்களுக்கே அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு தற்போதே தனியார் டாக்டர்களை நாடும் நிலை உள்ளது.எனவே கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது. அவசர கதியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்ட வாரியாக நடமாடும் மருத்துவ வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர். மேலும் பணி நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

    • மாட்டிற்கு சினை பிடிப்பதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை ரித்தீஸ் என்பவரை அனுப்பி வாங்கி உள்ளார்.
    • மாத்திரைகள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.

    ஊட்டச்சத்து மாத்திரை

    இவர் வீட்டில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு மாட்டிற்கு சினை பிடிப்பதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை ஆலங்குளம் அரசு கால்நடை மருத்துவமனையில் ரித்தீஸ் என்பவரை அனுப்பி வாங்கி உள்ளார்.

    வீட்டில் வந்து பார்த்த போது மாத்திரைகள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் மாத்திரை அட்டையில் காலாவதி தேதி 2020ம் ஆண்டு முதல் 2022ம்ஆண்டு பிப்ரவரி வரை அச்சிடப்பட்டிருந்தது.

    காலாவதியான மாத்திரை

    எனவே காலாவதியான மாத்திரைகளை வழங்கியது தெரியவந்தது. இதேபோன்று ஆலங்குளம் அரசு கால்நடை மருத்துவமனையில் தேதி முடிந்த தரமில்லாத மாத்திரைகள், ஊட்டச்சத்து கால்நடை உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், கால்நடையை வைத்திருக்கும் விவசாயிகள் அருகில் உள்ள சிறு கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அப்பகுதியினர் ஆதங்கப்படுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×