search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary hospitals"

    • உலக வெறிநாய் கடி தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ரேபிட்ஸ் நோய் மிக கொடியதாகும். இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது

    நெல்லை:

    உலக வெறிநாய் கடி தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது .

    இதில் நெல்லை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்வேல் மற்றும் அரிமா சங்க ஆளுநர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது .

    தொடர்ந்து மண்டல இணை இயக்குனர் பொன்வேல் கூறியதாவது:-

    ரேபிட்ஸ் நோய் மிக கொடியதாகும். இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது . இந்த நோய் தாக்கிய நாய்கள் கால்களை இழுத்து நடக்கும். வாயில் இருந்து கோழை வடியும். இந்த அறிகுறிகள் கண்டால் உடனடியாக நாயை தனி அறையில் கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும்.

    நோய் தாக்கப்பட நாய்கள் மனிதர்களை கடித்து விட்டால், இதே அறிகுறிகள் மனிதர்களுக்கும் ஏற்படும். எனவே எந்த நாய்கள் கடித்தாலும் சாதாரணமாக விட்டுவிடாமல் உடனடியாக நாய் கடித்த இடத்தை சோப்பு, டெட்டால் கொண்டு சுத்தம் செய்துவிட்டு மருத்துவ மனைக்கு சென்று முறையான சிகிச்சை பெறவேண்டும்.

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் இன்று 150-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவ மனைகளில் 2057 தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணையிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது.

    2030-ம் ஆண்டுக்குள் ரேவிட்ஸ் நோய் இல்லாத நிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ரோஜர், மருத்துவர் முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
    • மதியம் 2 மணிக்கு பணி முடிந்த பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.இம்மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது.சிறு, குறு விவசாயிகள், தங்கள் நிலங்களில் விவசாயப்பணிகளை மேற்கொள்வதுடன் அருகிலுள்ள நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்து திரும்பிய பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என மாற்றியமைத்தால், மருத்துவமனைகளின் செயல்பாடு பயனற்றதாகி விடும்.

    ஆய்வுப்பணிகள், அவசர சிகிச்சை, விரிவாக்கம், திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க, டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் செல்வது வழக்கம்.கால்நடை மருத்துவமனைகளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, யாராவது ஒருவர் பணியில் இருந்தாலும், முதலுதவி போன்ற உதவிகளை செய்ய முடியும்.மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிந்தால் மறுநாள் காலை 8மணி வரை, அதாவது, 18 மணி நேர இடைவெளியில் எவ்வித கால்நடை மருத்துவ சேவையும் கிடைக்காது.கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ளதால் நோய்த்தாக்குதல், அடிக்கடி ஏற்பட்டு பரவி வருகிறது.

    இவ்வகை கால்நடைகளை கட்டி வளர்க்கும் நிலையில், மருத்துவ ஊழியர்களை, விளைநிலங்களுக்கே அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு தற்போதே தனியார் டாக்டர்களை நாடும் நிலை உள்ளது.எனவே கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது. அவசர கதியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்ட வாரியாக நடமாடும் மருத்துவ வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர். மேலும் பணி நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

    ×