உள்ளூர் செய்திகள்
முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-04-30 09:27 GMT   |   Update On 2022-04-30 09:27 GMT
அமாவாசையை முன்னிட்டு காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆட்டையாம்பட் டி:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்த காளிப்பட்டியில் பிரசித்திபெற்ற கந்தசாமி கோவில் உள்ளது. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்வார்கள்.

சஷ்டி, கிருத்திகை என்று முருகனுக்குரிய அனைத்து வைபவங்களும் கோயிலில் களை கட்டும். இந்த நாட்களிலும் அமாவாசையிலும் பாலாபிஷேகம் செய்து கந்தனை வழிபடுவது கூடுதல் சிறப்பு. 

இங்கு அமாவாசை தினத்தை ஒட்டி உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் விசேஷ பூஜையும் நடைபெற்றது. அதிகாலையில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜையும் தீபாராதனை வழிபாடு நடந்தது.

இதில்  சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News