உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை - உறவினர் போக்சோவில் கைது

Published On 2022-04-29 09:38 GMT   |   Update On 2022-04-29 09:38 GMT
நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் உறவினர் கைது ெசய்யப்பட்டார்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள வலங்கைமான் நார்த்தங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு தெரியாமல் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான மோகன்ராஜ் என்பவர் ஆபாச படம் எடுத்துள்ளார். 

பின்னர் அந்த படத்தை காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

இதை அறிந்த மோகன்ராஜ் மற்றும் அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் சேர்ந்து சிறுமியை அடித்து துன்புறுத்தி யுள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கி கிடந்தார். 

உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராைஜ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவரது தந்தை தனிக்கொடி, தாயார் சாந்தி, தம்பி பாக்யராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News