உள்ளூர் செய்திகள்
கைது

கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை வாலிபர்

Published On 2022-04-27 07:21 GMT   |   Update On 2022-04-27 07:21 GMT
போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

போரூர்:

கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கீதா.

இவரது வீட்டிற்கு இரவு மதுபோதையில் அவரது சகோதரர் சீனிவாசன் வந்தார். அப்போது சீனிவாசன்-கீதா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அப்போது சீனிவாசன் அக்காள் கீதாவை தாக்கினார். இதுகுறித்து அவர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் எஸ்தர்ராஜ், சீனிவாசனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது போதையில் இருந்த சீனிவாசன் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் எஸ்தர் ராஜை தாக்கினார். இதில் அவருக்கு மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டது.

போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News