உள்ளூர் செய்திகள்
யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்ற காட்சி.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு

Published On 2022-04-26 09:20 GMT   |   Update On 2022-04-26 09:20 GMT
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தென்திருப்பேரை:

தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும், ஹெஜோ கெல்த் நேச்சுரல் கியூர் சென்டர் டாக்டருமான ஆரோக்கிய பழம் கூறியதாவது:-

மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் பரிந்துறையின்படி தபால்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுஸ் அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை அச்சம் பாக்கத்திலுள்ள மது இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் பரத், நேச்சுரோபதி மற்றும் யோகாத்துறைத் தலைவர் மருத்துவர் மாலினி ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் சங்கரசுப்பிரமணியன், லக்ட்சயா, லோகநாதன், பிரதீபா, ஜெயபாலன் இளங்கோவன் ஆகியோர் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, காந்தி மீயூசியம், மீனாட்சியம்மன் கோவில், ஆர்.எம்.எஸ் தபால்நிலையம் மற்றும் டி.எம்.எஸ் தபால் நிலையம் ஆகிய இடங்களில் யோகா வகுப்புகள் நடத்தினர்.

 இவர்களின் சேவையை பாராட்டி இதுபோன்ற மக்கள் பணியை, தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து நமது சங்கம் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதோடு, சங்க உறுப்பினர்கள் இதுபோன்ற மக்கள் பணிகளை தென்னிந்தியா முழுவதும் செய்ய வேண்டும் என்று கூறினார்.
Tags:    

Similar News