உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 14 பேர் கைது

Published On 2022-04-25 09:41 GMT   |   Update On 2022-04-25 09:41 GMT
நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 14 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

 நேற்று நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 196 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News