உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் தனியார் பஸ் மோதி கூலி தொழிலாளி பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தனியார் பஸ் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம்:
திண்டிவனம் பூந்தோட்டம், கசாமியான் தெருவை சேர்ந்தவர் காட்டேரி என்கின்ற சுந்தரபாண்டியன் (வயது 30). இவர் கடந்த 21-ந் தேதி மேம்பாலம் அருகே நேரு வீதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுந்தரபாண்டியன் உயிரிழந்தார். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டிவனம் பூந்தோட்டம், கசாமியான் தெருவை சேர்ந்தவர் காட்டேரி என்கின்ற சுந்தரபாண்டியன் (வயது 30). இவர் கடந்த 21-ந் தேதி மேம்பாலம் அருகே நேரு வீதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுந்தரபாண்டியன் உயிரிழந்தார். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.