உள்ளூர் செய்திகள்
மேல்செங்கம் விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் விதை பண்ணையில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ. மு.பெ.கிரி சட்டப்பேரவையில் மேல்செங்கம் விதை பண்ணை குறித்து வைத்த கோரிக்கையின் தொடர்ச்சியாக கலெக்டர் முருகேஷ் செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் விதைப் பண்ணையில் ஆய்வு செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் வெற்றிவேல், மாவட்ட வன அலுவலர் டாக்டர்.அருண்லால், வட்டாட்சியர் முனுசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், சந்திரகுமார் உள்பட வருவாய்த் துறை, வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.