உள்ளூர் செய்திகள்
தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி

Published On 2022-04-21 09:36 GMT   |   Update On 2022-04-21 09:36 GMT
செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது.
செங்கோட்டை:

செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீ தடுப்பு பிரசாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

 இதன் ஒரு பகுதியாக தேன் பொத்தை அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் வீரர்கள் மாரியப்பன், சிவக்குமார், வினுக்குமார், கோமதி சங்கர், ராஜா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி, செயல்முறைவிளக்கம் மற்றும் துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. 

நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News