உள்ளூர் செய்திகள்
அணை பகுதியில் மீண்டும் மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது.
பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 15.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2 அணை பகுதியிலும் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மழை பெய்து வருவதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.