உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஜோலார்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-04-19 10:10 GMT   |   Update On 2022-04-19 10:10 GMT
ஜோலார்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
 ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் சந்தேகத்தின்பேரில் திரிந்த வாலிபரை  பிடித்து விசாரணை நடத்தினர். 

அவர் புது ஓட்டல் தெரு பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடையில் மறைவாக வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News