உள்ளூர் செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு- கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-04-14 02:55 GMT   |   Update On 2022-04-14 02:55 GMT
தமிழ்ப் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை:

சித்திரை முதல் நாளான இன்று 'பிலவ' வருடம் விடைபெற்று 'சுப கிருது' புத்தாண்டு பிறந்துள்ளது.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News