உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சூலூர் அருகே இளம்பெண் மாயம்

Published On 2022-04-12 09:47 GMT   |   Update On 2022-04-12 09:47 GMT
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
சூலூர், 
சூலூர் அருகே பீடம் பள்ளி ஊராட்சிக் குட்பட்ட நடுப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் தம்புராஜ்.  இவர் அப் பகுதியில் கூலிவேலை செய்து வருகிறார்.  இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இரண்  டாவது மகளான காஞ்சனா தேவி (23) என்பவர்  10&ம் வகுப்பு வரை படித்துவிட்டு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக காஞ்சனா தேவி அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். 
நேற்று தம்புராஜ் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்ற பின் காஞ்சனா தேவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மதியம் தம்புராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது காஞ்சனா தேவி மாய மாகி இருந் தார். அவர் எங்கு சென் றார்? என்று தெரி ய வில் லை. இதுபற்றி சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.  
Tags:    

Similar News