உள்ளூர் செய்திகள்
சுஜித்

திண்டுக்கல் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2022-04-09 09:04 GMT   |   Update On 2022-04-09 09:04 GMT
திண்டுக்கல் அருகே பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேசுராஜ். இவரது மகன் சுஜித் (வயது 25).இவர் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சுஜித் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சுஜித் இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News