உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தனியார் பஸ் மீது கல்வீச்சு

Published On 2022-03-30 09:55 GMT   |   Update On 2022-03-30 09:55 GMT
தனியார் பஸ் மீது கல் எரிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி :

திருச்சி பி.மேட்டூரில் இருந்து துறையூர் நோக்கி இரவு ஒரு தனியார் பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை பி.மேட்டூர் கங்காணி தெருவை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றார்.  கோட்டப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு  மீண்டும் அந்த பஸ் புறப்பட்டது.

இந்த நேரத்தில் மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார்.

அதற்குள் கல்வீசிய விஷமிகள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து சுபாஷ் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பெரியமணி வழக்குப்பதிவு செய்து பஸ்சின் கண்ணாடியை உடைத்த நபர்களை தேடி வருகிறார்.  

Tags:    

Similar News