உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் கம்யூனிஸ்டு வாகன பிரசாரம்
நாடு தழுவிய அளவில் வருகிற 28, 29-ந் தேதிகளில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிது. இது தொடர்பாக கம்யூனிஸ்டு சார்பில் உடன்குடியில் வாகன பிரசாரம் நடைபெற்றது.
உடன்குடி:
அரசுப்பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 28,29-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களிடையே விளக்கும் வகையில் உடன்குடி பகுதியில் வாகனப் பிரசாரம் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யு. மாநில செயலர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலர் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைவர் பாலசிங்கம், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, ஆறுமுகம், ஆண்டி, சிவராமன், கந்தசாமி, பாலசிவசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசுப்பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கக்கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 28,29-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களிடையே விளக்கும் வகையில் உடன்குடி பகுதியில் வாகனப் பிரசாரம் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யு. மாநில செயலர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலர் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைவர் பாலசிங்கம், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, ஆறுமுகம், ஆண்டி, சிவராமன், கந்தசாமி, பாலசிவசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.